டிச.,22ல் வேளாண் நிலையத்தில் பொன்மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்
பிற்பகல் 9:36 22ல் வேளாண் நிலையத்தில் பொன்மீன் வளர்ப்பு பயிற்சி முகாம், டிச. 0 கருத்துகள் Admin
நாமக்கல்: "நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ம் தேதி பொன்மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது' என, திட்ட ஒருங்கிணைப் பாளர் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ம் தேதி செவ்வாய் கிழமை பொன்மீன் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அந்த பயிற்சியில், "பொன் மீன் என்பது என்ன, அவற்றை எவ்வாறு வளர்ப்பது, உணவுப் பழக்க வழக்கம் மற்றும் இனப்பெருக்க முறை, தொட்டி மற்றும் வளர்ப்புக் குளங்களில் அவற்றை எவ்வாறு வளர்ப்பது' என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
வளர்ப்பு பொருளாதாரம், தொழில்நுட்பம் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளோர் மோகனூர் சாலையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் 21ம் தேதிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: 22ல் வேளாண் நிலையத்தில் பொன்மீன் வளர்ப்பு பயிற்சி முகாம், டிச.
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...