திருப்போரூர் :உழவர் வயல்வெளி பள்ளி துவக்கம்
பிற்பகல் 8:55 திருப்போரூர் :உழவர் வயல்வெளி பள்ளி துவக்கம் 0 கருத்துகள் Admin
திருப்போரூர் அருகே உழவர் வயல்வெளிப் பள்ளி செயல்படுத்தப்பட்டுள்ளது.திருப்போரூர் வட்டாரத்தில் கொளத்தூர், மேலையூர், மானாமதி ஆகிய ஒவ்வொரு கிராமத்திற்கும் நெற்பயிர்கள் பயிரிடும் தலா 30 விவசாயிகள் என 90 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, வயல்வெளிப் பள்ளிகள் ஆரம்பிக்கப் ட்டுள்ளன.இப்பள்ளிக்கு ஒருங்கிணைப்பாளராக உதவி வேளாண்மை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வயல்வெளிப் பள்ளிகள் மூலம் ஆரோக்கியமான பயிர்வளர்ப்பு, நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாத்தல், வாராந்திர வயல் சூழ்நிலை ஆய்வு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.மற்ற விவசாயிகளும் வாராந்திர கூட்டங்களில் பங்கேற்று பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கனிங்சன் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: திருப்போரூர் :உழவர் வயல்வெளி பள்ளி துவக்கம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...